எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ராண்டி கில்கோர்கட்டுரைகள்

வால்டோவை கண்டுபிடி

சிறந்த சிறுவர் புத்தகங்களில், இன்று அதிகமாக விற்பனையாகும் “வால்டோ எங்கே” (Where’s Waldo) என்னும் கார்ட்டூன் புத்தகதொகுப்பின் நட்சத்திர ஹீரோ ‘வால்டோ’. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள காட்சிகளில், மற்ற கதாப்பாத்திரங்களுக்கிடையே வால்டோ மறைந்து கொள்வான். சிறுவர்கள் அவனை கண்டுப்பிடிக்கவேண்டும். இதுவே அப்புத்தகத்தின் கரு. உலகெங்கும் உள்ள பெற்றோர்கள், தங்கள் சிறு பிள்ளைகள் வால்டோவை கண்டு பிடிக்கும் பொழுது, அவர்கள்  முகங்களில் வெளிப்படுத்தும் வெற்றிக் களிப்பைக் கண்டு ரசிப்பார்கள். சில சமயம் தங்கள் பிள்ளைகள் வால்டோவை கண்டுபிடிக்க அவர்களையும் சேர்த்துக்கொள்ளும் பொழுது, அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

ஆதித் திருச்சபையில் மூப்பராக இருந்த ஸ்தேவான், கிருஸ்துவைக் குறித்து பிரசங்கித்ததற்காக கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, (அப். 7) கிறிஸ்தவர்களுக்கு எதிராக உபத்திரவம் பெருக ஆரம்பித்தது. ஆகவே அவர்கள் எருசலேமை விட்டு தப்பியோடினார்கள். அப்பொழுது இன்னொரு மூப்பராகிய பிலிப்பு, சமாரியவிற்கு தப்பிச்சென்ற கிறிஸ்தவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அவர்களுக்கு கிறிஸ்துவைக் குறித்து இன்னும் அதிகமாய் பிரசங்கித்தான். அதை அவர்கள் எற்றுக்கொண்டார்கள் (8:6). அவ்வேளை, பரிசுத்த ஆவியானவர், ஒரு “விசேஷ” பணி நிமித்தமாக “வனாந்திர பாதையிலே” பிலிப்பை அனுப்பினார். தன்னுடைய சுவிசேஷப் பணியின் மூலம், மிகுந்த பலனை சமாரியாவிலே காணும்பொழுது, ஆவியானவரின் வழிநடத்துதல் பிலிப்பிற்கு விசித்திரமாக தோன்றியிருக்கக்கூடும். ஆனால், வழியிலே ஒரு எத்தியோப்பிய நாட்டு மந்திரிக்கு, ஏசாயா புத்தகத்திலிருந்து, கிறிஸ்துவை அவன் கண்டுகொள்ள உதவி செய்தபொழுது, பிலிப்பிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! (வச. 26-40).

இதைப்போலவே, வேதத்தின் மூலம் பிறர் “இயேசுவை கண்டுக்கொள்ள” நாம் உதவும்படியான அநேக சந்தர்ப்பங்கள் நமக்கு கொடுக்கப்படுகின்றன. தன் பிள்ளை, வால்டோவை கண்டுப் பிடித்த போது, அவன் கண்களில் வெளிப்பட்ட சந்தோஷத்தைக் கண்டு மகிழும் பெற்றோரைப் போலவும், ஒரு எத்தியோப்பிய தலைவன் இயேசுவை கண்டடைந்த பொழுது பிலிப்புக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சியை போலவும், நாமும் நம்மை சுற்றியுள்ளவர்கள் இயேசுவை கண்டுகொள்ளும்போது மிகுந்த சந்தோஷமடைவோம். ஒவ்வொரு நாளும் ஆவியானவரின் வழிநடத்துதலோடு, நமக்கு மிகவும் பரிச்சயமானவர்களானாலும் சரி, அல்லது ஒரே முறை சந்தித்தவர்களானாலும் சரி, கிறிஸ்துவைக் குறித்து அவர்களிடம் பகிர நாம் ஆயத்தப்படு வோமாக.

கனம் கனத்தை சந்திக்கட்டும்

அர்லிங்டன் (Arlington) தேசிய கல்லறையிலுள்ள ‘அறியாதவர்களின் கல்லறையில்’ நடந்தேறும் காவலர் மாற்றம் என்னை எப்போதும் வெகுவாய் கவர்ந்ததுண்டு. மிக மரியாதையுடன் கம்பீரமாக அதே சமயம் எளிமையாகவும் அந்நிகழ்வு நடக்கும். ‘தேவன் மாத்திரமே அறிந்த’ அப்போர்வீரர்களையும் அவர்களுடைய தியாகத்தையும் எண்ணி மிக ஜாக்கிரதையாக வடிவமைத்து இயக்கப்பட்ட இந்நிகழ்வு நெஞ்சை
நெகிழ வைக்கும் அஞ்சலி ஆகும். அது மாத்திரமல்ல மக்கள் கூட்டம் ஏதுமில்லாத போதும், முன்னும் பின்னுமாக சீரான வேகத்தில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் மோசமான வானிலையிலும் அக்காவலர் நடந்துசெல்வது நெஞ்சை நெகிழச் செய்யும். 

2003ஆம் ஆண்டு வாஷிங்டன் மாநகரை இசபெல் (Isabel) சூறாவளி நெருங்கிக் கொண்டிருந்தபொழுது, அது அந்நகரை தாக்கக்கூடிய மிக மோசமான நேரத்தில் அக்காவலர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் கிட்டத்தட்ட அக்காவலர் அனைவரும் அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. சூறாவளி வீசிய போதும் கூட மடிந்துபோன தங்களுடைய தோழர்களை கனப்படுத்தும் பொருட்டு எவ்வித சுயநலமுமின்றி அவரவர் இடத்திலேயே நின்றார்கள். 

தேவனிடத்தில் மனந்தளராத தன்னலமற்ற பக்தியுடன் நாம் வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என்று மத்தேயு 6ஆம் அதிகாரத்தில் உள்ள இயேசுவின் போதனை நமக்கு தெரிவிப்பதாக நான் விசுவாசிக்கிறேன் (வச. 1-6). நற்கிரியைகளுக்கும் பரிசுத்த ஜீவியத்திற்கும் நேராக வேதாகமம் நம்மை அழைக்கிறது. ஆனால் இவை ஆராதனைக்கும் கீழ்ப்படிதலுக்குமுரிய காரியங்களாக இருக்க வேண்டுமே அன்றி (வச. 4-6), நம்முடைய சுய மகிமைக்காக திட்டமிட்டு செயல்படுத்தபட்ட காரியங்களாக இருக்கக்கூடாது (வச. 2). நம்முடைய ஜீவியம் முழுவதும் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய சரீரங்களை “ஜீவ பலியாக” ஒப்புக்கொடுக்கும்படி நம்மை நோக்கி மன்றாடுகிறார் (ரோம. 12:1) 

தேவனே, எங்களுடைய தனிமையான தருணங்களும் தனிமையற்ற தருணங்களும் நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பையும், பக்தியையும் பறைசாற்றுவதாக.

எப்பொழுதும் நேசிக்கப்பட்டு, எப்பொழுதும் மதிக்கப்பட்டிருக்கிறோம்

நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

நாம் வேலை செய்து நம்முடைய குடும்பங்களை போஷிக்கவும், தான் சிருஷ்டித்த இவ்வுலகை பொறுப்போடு பராமரிக்கவும் தேவன் விரும்புவது உண்மையே. சொல்லப் போனால் நம்மை சுற்றியுள்ள பெலனற்றவர்கள், பசியுள்ளவர்கள், வஸ்திரமில்லாதவர்கள், தாகமாயிருப்பவர்கள் மற்றும் மனமுடைந்த அனைவருக்கும் ஊழியஞ்செய்து, அதே சமயத்தில் பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பை இன்னும் தங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளாதவர்களை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஆனாலும், நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

இதை நாம் ஒருநாளும் மறக்கக்கூடாது. ஏனென்றால் “தேவனுக்காக செய்ய” உதவும் நம்முடைய பெலன் சுகவீனத்தினாலோ, தோல்வியினாலோ, எதிர்பாராத பேரழிவினாலோ நம்மிடமிருந்து கிழித்தெறியப்படும் காலமும் வரலாம். அப்பொழுது நாம் தேவனுக்காக செய்யும் வேலைக்காக அவர் நம்மை நேசியாமல், நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் நம்மை நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்படி தேவன் விரும்புகிறார்! இரட்சிப்படையும்படி கிறிஸ்துவின் நாமத்தை அழைத்தது முதல், “உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, பட்டயமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க முடியாது” (ரோம. 8:36,39).

நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டாலும் அல்லது நம்மிடமுள்ள அனைத்தையும் நாம் இழந்து போனாலும், தேவன் நம்மிடம் எதிர்பார்பது ஒன்றைத் தான். அது அவருக்குள் உள்ள நம்முடைய அடையாளத்தில் இளைப்பாறுவதையே.

எளிமையான வார்த்தைகளில் உள்ள வல்லமை

மருத்துவமனையில் இருந்த என் தந்தையின் அறையில் இருந்து பலத்த சிரிப்பு சத்தம் எழும்பியது. வேறொன்றுமில்லை, எனது தந்தையைச் சந்திக்க அவருடைய நண்பர்களான லாரி ஓட்டுநர்கள் இரண்டு பேரும், அருகிலிருந்த வயல்களிலிருந்த இரண்டு பெண் மணிகளும் நானும் அங்கிருந்தேன். லாரி ஓட்டுநர்களில் ஒருவர் இளவயதில் கிராமிய பாடல்கள் பாடி வந்தவர், மற்றொருவர் தச்சுவேலை செய்து வந்தவர்.

“பின்பு அவர் அந்த கண்ணாடி பாட்டிலை என் தலைமேல் போட்டு உடைத்தார்” என்று அந்த தச்சுவேலைக்காரர் மதுபான விடுதி ஒன்றில் நடந்த கதையைக் கூறி முடித்தார்.

நகைச்சுவையுடன் கூறப்பட்ட பழங்கதையைக் கேட்டு அறையே சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கியது. நுரையீரல் புற்றுநோயால் அவதியுற்ற என் தந்தை சுவாசிக்க கடினப்பட்டாலும் நன்கு சிரித்து மகிழ்ந்தார். பின்னர் அனைவருக்கும் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தினார். “ராண்டி ஒரு போதகர்” எனக் கூறி அனைவரும் கவனமாய் பேச வேண்டும் என்பது போல் வேடிக்கையாய் சொன்னார். இரண்டு விநாடிகளுக்கு அமைதி நிலவியது, அதன் பின்னர் இந்த புதிய செய்தியைக் கேட்டு அறையே சிரிப்பில் வெடித்து சிதறியது.

இவ்வாறாக நாற்பது நிமிடங்கள் சென்றிருக்கும். அப்பொழுது திடீரென அந்த தச்சுவேலை செய்பவர் தன் தொண்டையை சரி செய்து, தந்தையின் பக்கம் திரும்பி, “சரி ஹோவர்ட் (Howard) இத்தோடு குடியும், மதுபானச் சண்டையும் எனக்கு கிடையாது. அந்நாட்கள் முடிந்து போயிற்று. இன்றைக்கு நான் வாழ்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. என்னுடைய மீட்பரும் இரட்சகருமாகிய இயேசுவைப் பற்றி உன்னிடம் பேச வேண்டும்”

பின்னர் அவர் அதைப் பற்றி பேச ஆரம்பித்தார். முதலில் லேசாக வேண்டாம் என மறுத்த என் தந்தை பின்னர் கேட்கத் தொடங்கினார். அதைவிட இனிமையாய், அழகாய், அமைதியாய் நற்செய்தியை பிரசங்கித்து நான் கேட்டதில்லை. என் தந்தை அதை கூர்ந்து கேட்டு கவனித்தார். சில வருடங்கள் கழிந்த பின்பு இயேசுவை விசுவாசித்தார்.

ஓர் பழைய நண்பர் அவரது எளிமையான வாழ்வில் இருந்து பகிர்ந்த மிக எளிமையான சாட்சி அது. எளிமை என்பது பெலவீனமானதோ அல்லது மூடத்தனமானதோ அல்ல, மாறாக அது ஒளிவுமறைவின்றி நேர்மையானது என்பதை நான் அன்று அறிந்து கொண்டேன்.

இயேசுவைப் போல. அவரது இரட்சிப்பைப் போல.

மிகச் சிறந்த பரிசு

நியூ இங்கிலாந்தில் வடக்கே உள்ள ஓர் குளிர்கால ஒடுக்கக் கூட்ட (retreat) மையத்தில் ஒருவர், “நீங்கள் பெற்ற மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு எது?” என்ற கேள்வியை கேட்டார்.

அப்பொழுது விளையாட்டு வீரர் ஒருவர் ஆர்வத்துடன் பதில் அளித்தார். “எளிமையான கேள்வி. சில வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரி படிப்பை முடிக்கும் போது நிச்சயமாக நான் கால்பந்து வீரனாவேன் என்று எண்ணினேன். அது நடக்கவில்லை. அதனால் கோப மடைந்தேன். வாழ்க்கை கசந்துபோனது. அது என்னை வாட்டியது. அக்கசப்பை எனக்கு உதவிசெய்ய வந்தவர்களிடம் கூட காட்டினேன்” என்று அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பரை பார்த்தவாறு கூறினார்.

“இரண்டு வருடங்கள் கால்பந்து இல்லாமல் ஓடியது. அப்போது கிறிஸ்துமஸ் நாட்களில், இவருடைய சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நாடகத்தை காணச் சென்றேன்” என்று அவரின் நண்பரை சுட்டிக்காட்டினார். “இயேசுவை நான் தேடிப்போகவில்லை. என்னுடைய சகோதரியின் மகள் அந்த நாடகத்தில் இருந்தாள். அவளை காணச் சென்றேன். ஆனால் நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது, தீடீரென எனக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. இது சற்று வேடிக்கையான விஷயமாக தோன்றும்; ஆனால் திடீரென எனக்கு இயேசுவை சந்திக்க வேண்டும் போல் இருந்தது. அந்த மேய்ப்பர்களோடும், தூதர்களோடும் சேர்ந்து கொள்ள மனம் துடித்தது. அப்பொழுது அனைவரும் ‘சைலன்ட் நைட்’ (Silent Night) பாடலை பாடி முடித்தனர். நானோ கண்ணீர் மல்க அழுதுகொண்டு அமர்ந்திருந்தேன்.

“அன்றைக்கு தான் எனக்கு மிகச்சிறந்த கிறிஸ்துமஸ் பரிசுகிடைத்தது.” திரும்பவும் அவரது நண்பரைச் சுட்டிக்காட்டி, “இந்த மனிதன் அவருடைய குடும்பத்தை தனியே அனுப்பி விட்டு என்னோடு நற்செய்தியை பகிர்ந்து, நான் இயேசுவை சந்திப்பதற்காக நேரம் செலவிட்டார்” என்றான்.

அப்போது அவரது நண்பன் குறுக்கிட்டு “நண்பர்களே, அது தான் நான் பெற்ற மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசாகும்!” என்று கூறினார்.

இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நாம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றின இந்த எளிமையான கதையை மற்றவருடன் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.

எல்லையற்ற அன்பு

1900 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பாக்ஸர் புரட்சியின் போது (Boxer Rebellion), டாய் யுன் ஃபு (T’ai Yuan Fu) என்பவரின் வீட்டில் சில மிஷனரி ஊழியர்கள் மாட்டிக் கொண்டனர். இவர்கள் உயிரை வாங்கும் வெறியோடு, இவர்களுக்கு எதிராக வெளியே கோஷமிட்டுக் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்களைப் பொருட்படுத்தாமல், தப்பியோடினால் மாத்திரமே உயிர் பிழைக்க முடியும் என்று அவர்கள் அறிந்தனர். அதனால் அவர்களிடம் இருந்த சில ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அப்பொழுது ‘எடித் கூம்ஸ்’ (Edith Coombs) என்பவர் தன்னிடம் படிக்கும் இரண்டு சீன மாணவர்கள் ஆபத்தில் மாட்டி கொண்டிருப்பதைப் பார்த்து, திரும்பி ஓடி ஒரு மாணவனை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டு மீண்டும் அடுத்த மாணவருக்காக வரும் போது தடுக்கி விழுந்த சமயத்தில் கொல்லப்பட்டார்.

இதே நேரத்தில் வேறு சில மிஷனரிகள் சின் சொவ் (Hsin Chou) மாவட்டத்தில் இருந்து தப்பித்து கிராமப்புறங்களில் ஒளிந்து கொண்டிருந்தனர். ஹோ சுயன் கொய்வி (Ho Tsuen Kwei) என்ற சீன நண்பர் அவர்களுக்குத் துணையாய் இருந்தார். அவர்கள் தப்பிச் செல்ல ஓர் மாற்று வழியை கண்டு பிடிக்க முயற்சி செய்தபோது ஹோ சுயன் கொய்வி கிளர்ச்சியாளர்களிடம் மாட்டிக் கொண்டார். அவர்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்காததால் இவரும் கொல்லப்பட்டார்.

எடிட்த் கூம்ஸ் மற்றும் ஹோ சுயன் கொய்வி போன்றவர்களின் வாழ்க்கையை நாம் பார்க்கும் பொழுது, தேசப்பற்று, கலாச்சாரம் ஆகியவற்றை தாண்டிய ஓர் அன்பு எழும்புவதை நாம் காணலாம். மரணத்தை பொருட்படுத்தாமல் ஜீவ பலியாய் தங்களை ஒப்புக் கொடுத்த அவர்களது வாழ்க்கை நமது இரட்சகராகிய இயேசுவின் மகா கிருபையையும், அன்பையும் தான் நினைவூட்டுகிறது.

கைது செய்யப்பட்டு பின்னர் கொடூர மரணமடைவோம் என அறிந்தும் இயேசு கைதாவதற்காக காத்திருந்தார். அப்பொழுது “பிதாவே, உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி செய்யும்” என்று ஜெபத்தில் மன்றாடிய அவர், கடைசியில் “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக். 22:42) என அவரது விண்ணப்பத்தை முடித்தார். அவரது வார்த்தையில் வீரமும், அன்பும், தியாகமும் மேலோங்கி நின்றது. அவர் மரித்து உயிர்தெழுந்ததினால் தான் நம்மால் நித்தியவாழ்வை அனுபவிக்க முடிகிறது.

மாறுபடும் இருதயங்கள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்த இறுதி நாட்களில் ஐக்கிய படைக்கு ஜாஸ்வா சேம்பர்லின் தலைவனாக இருந்து படையை வழிநடத்தினார். அவரது படை வீரர்கள் சாலையின் இருபக்கமும் நின்றார்கள், ஆகவே கூட்டமைப்புப் படை சரணடைந்தபொழுது, சாலையின் இருபக்கமும் நின்ற அவனது படைவீரர்களுக்கு நடுவாக எதிராளியின் படையினர் நடந்து செல்ல வேண்டியதிருந்தது. ஒரு தவறான வார்த்தையோ, பகைமை உணர்ச்சியைத் தூண்டும் ஒரு செயலோ, அதிக ஆவலுடன் காத்திருந்த சமாதானத்தை படுகொலை சம்பவமாக மாற்றிவிடலாம். உணர்வுகள் தொடப்படக்கூடிய வண்ணம் சேம்பர்லின் ஒரு புத்திசாலித்தனமான கட்டளையைக் கொடுத்தார். அவர்களது எதிராளிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணமாக, அவனது படை வீரர்களை அவர்களுக்கு சல்யூட் பண்ணும்படி கூறினான். பழிவாங்குதலுக்கோ, தீமை விளைவிக்கக்கூடிய பேச்சுக்கோ அங்கு இடமில்லை. அவனுடைய வீரர்களை சல்யூட் பண்ணும் வண்ணமாக துப்பாக்கிகளை உயர்த்தி, குண்டுகளை முழக்கி, வாள்களை உயர்த்தி எதிராளிகளுக்கு மரியாதை செலுத்தி நின்றார்கள்.

லூக்கா 6ம் அதிகாரத்தில் இயேசு மன்னிப்பைப் பற்றி பேசினபொழுது, கிருபையைப் பெற்ற மக்களுக்கும், கிருபை இல்லாத மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்தார். அவரது மன்னிப்பை அறிந்தவர்கள் மற்றவர்களைப்போல அல்லாமல் முற்றிலும் மாறுபட்டு இருப்பார்கள். பிறரால் செய்ய இயலாது என்று எண்ணும் காரியங்களை நாம் செய்ய வேண்டும். நமது சத்துருக்களை மன்னித்து அவர்களை சிநேகிக்க வேண்டும். “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக். 6:36).

இந்தக்கோட்பாடை நாம் பின்பற்றினால் நாம் பணி செய்யும் இடங்களில், நமது குடும்பங்களில் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள். பகைவர்களுக்கு மரியாதையுடன் சல்யூட் செய்த நிகழ்ச்சி, படைகளை ஒற்றுமையாக்க முடிந்தால், நம்மூலமாக கிறிஸ்துவின் கிருபை பிரதிபலிக்கப்பட்டால், வல்லமையான பெரிய மாற்றங்களை உண்டுபண்ணும். வேதாகமத்தில் இதற்கான சான்றுகளைப் பார்க்கிறோம். உதாரணமாக ஏமாற்றின சகோதரனான யாக்கோபை கட்டித்தழுவிய ஏசாவின் செயல் (ஆதி. 33:4), மிகவும் சந்தோஷத்துடன் சகேயு செய்த பாவ அறிக்கை (லூக். 19:1–10), கெட்ட குமாரனை ஓடிப்போய் கட்டி முத்தமிட்ட தகப்பனாரின் செயல் (லூக். 15) ஆகும்.

கிறிஸ்துவினுடைய கிருபையினால் நமக்கும், நமது எதிராளிகளுக்கும் இடையே உள்ள கசப்புணர்ச்சி, கருத்து வேறுபாடு இவைகளுக்கு இன்றே இறுதிநாளாக இருக்கட்டும்.

கல்லெறி தூரத்தில்

விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, மதத்தலைவர்கள் கூட்டம் ஒன்று அவளை மந்தையை ஓட்டி வருவது போல இயேசுவிடம் இழுத்து வரும் பொழுது, கல்லெறி தூரத்திலுள்ள கிருபைக்குள் அவளை அழைத்து வருகிறார்கள் என்பதை அறியாதிருந்தார்கள். இயேசுவை இழிவுபடுத்துவதே அவர்களுடைய எதிர்பார்ப்பாய் இருந்தது. ஒரு வேளை அவர் அவளை விட்டுவிடும்படி சொன்னால், மோசேயின் பிரமாணங்களை மீறுகிறதாய் குற்றம் சாட்டலாம் அல்லது அவளை ஆக்கினைக்குள்ளாக தீர்த்து மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தால், அவரை பின்பற்றும் கூட்டம் அவருடைய இரக்கமும், கிருபையும் நிறைந்த வார்த்தைகளை உதறிவிடுவார்கள்.

ஆனால் இயேசுவோ, குற்றம்சாட்டினவர்கள் எய்த அம்பை…

சாந்தத்தோடு தாக்கத்தை ஏற்படுத்துதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 26வது ஜனாதிபதியாக தியோடர் ரூஸ்வெல்ட் (1901–1909) ஆவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மூத்தமகன் தியோடர் ஜுனியருக்கு உடல்நலமில்லை என்பதைக் கேள்விப்பட்டார். அவரது மகனுடைய நோய் சுகம் அடையக்கூடியதாக இருந்தாலும், டெட்டின் சுகவீனத்திற்காக கூறப்பட்ட காரணம் ரூஸ்வெல்ட்டை மிக அதிகம் பாதித்தது. அவரது மகனின் நோய்க்கு அவர்தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ரூஸ்வெல்ட் அவரது பெலவீனமான குழந்தைப் பருவத்தில் “சண்டை” வீரனாக வேண்டும் என்ற எண்ணம் அவரது வாழ்க்கையில் செயல்படாததால், அவரது மகன் சிறந்த சண்டை வீரனாக வேண்டுமென்று…